2009-09-07

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 10


இசையும் கதையும்


சிறீ வள்ளி திருமண ஒழுங்குகள்.

சிற்றூர் அடைந்து சிறுமி வள்ளி நாயகியை
முற்றும் உணர் வேந்தர் வடிவேற்கரசருக்கு
சுற்றம் முற்றும் சூழ்ந்து நின்று துதி செய்ய
சற்றும் தாமதியாமல் பணிந்து தாரை வார்த்தான் நம்பிராசன்

திருமணப்பாட்டு

கன்னி வள்ளி நாயகிக்கும் கந்தப்ப நாதனுக்கும்
மன்னும் உயர் சதுர் மறையின் வகுத்த விதி தவறாமல்
உன்னு திரு மணக் கிரியை ஓங்கு திருவருள் கொண்டு
முன்னுணரும் நாதரமா முனிராசன் செய்தாரே

திருவருட் குறிப்பாலே - நாரதர் தீவளர்த்து வேதவிதிக் கிரியை செய்தார்
அரியயன் சுரர் சூழ - சிவனார் ஆதி சக்தியோ விண்ணின்று மகிழ்ந்தார்
தேவர் பூ மழை சொரிந்தார் - ஞானச் சிங்கார வேலனுக்கு வாழ்த்துரைத்தார்
பாவலர் பாடி நின்றார் அடியார் பத்திரசத்தேனொழுகி ஆடி நின்றார்

திருமண வாழ்த்து

பல்லவி
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே மங்களமாய் வாழ்கவே
(வாழ்க)

அனுபல்லவி
வள்ளல் முருகன் வள்ளி தெய்வ யானையொடு வாழ்கவே
(வாழ்க)

சரணம்
ஏழ்க திருடன் ஒளியூமாகி இன்பமலரும் மணியுமாகி
சூழுமறைகளும் செயலுமாகி சுகமும் பொருளும் பயனுமாகி
அறமும் பொருளும் சுகமும் பெருக அரிய மறையின் நெறிகள் பெருக
அறிவு மிளிரும் கதிகள் பெருக அன்பு மணத்தின் பண்பு பெருக
(வாழ்க)


சிறீ வள்ளி திருமணம் முற்றிற்று

------ திருச்சிற்றம்பலம்
--------


2 வாசகர் கருத்துக்கள்:

சுகி சொன்னது…

பாடல் வரிகள் நன்று. வாழ்க சைவப்பணி.

சைவப்பிரியர் சிவகுணம் சொன்னது…

நன்றி சுகி. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

கருத்துரையிடுக