2009-09-03

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 05


இசையும் கதையும்

வேடுவர்கள் வருகை
:

வேடர்கள் மிக ஆரவாரமாக பல ஒலிகள் முழுங்க மிருக வேட்டையாடி விட்டு வரும்போது முருகன் கிழவன் உருவமாகிறார்.

பாட்டு:

பாட்டோடு வந்தடைந்த பல வேடர்..
கூட்டமதைப் பார்த்த சிலை வேல் வேடுவனார்..
பழுத்த நரைத் தாடியூடன் ஆட்டும் நடை நடந்தே..
அக்கை மணி வெண்ணீற்றின் அழகு...
விழங்க கிழ வடிவினராய் நின்றாரே...

முருகன் நம்பிக்கு நீறு கொடுத்தல்

ஓம்……..
நம்பி உனக்கு வெற்றி நலமே உண்டாகுக!

நம்பி மன்னர் (கிழவரைப் பார்த்து )
கோவே நீர் எங்கு வந்தீர் கூறுமின்கள்...

முருகன்

அப்பனே நம்பியே நான் அருட் குமரி தீர்த்தத்தே ஆட வந்தேன் (இது அருங் கருத்து)

நம்பி மன்னர்

ஆகா.. அப்படியே ஆகட்டும் நம் வள்ளிக்கும் துணையாகட்டும் இங்கிரும் ஐயரே!

(நம்பிராசன் அகன்றதும்)
முருக பஜனை வள்ளி தோழியர்களுடன் படிப்பதைக் கேட்டும் மகிழ்ந்துவள்ளியின் இனிய குரலும் அவள் தன் மீது வைத்திருந்த அன்பையூம் அறிந்ததும்

முருகன்

கிஞ்சுகமே நன்று நன்றென் மிஞ்சு பசி தீர்ப்பாயே…
சாதமிட்டுத் தீராத தனிப்பசியைத் தீர்ப்பாயே…
தாமதம் செய்யாதே தையலே…

வள்ளி அமுதூட்டல்

மாதவத்தோர் போற்றும் மறைக்கிழவரே…
இந்த வனவேடர் உண்பதுவும் வள்ளிக்கிழங்கும்…
பழமும் பயில் தேனும் தினை மாவும் என்பதனால்…
அதனைத் தருகின்றேன் இந்தாரும்!

அப்பெருமான் வள்ளியது கையாலே வாங்கியூண்டார்…
அப்பொழுது விழுங்கிட முடியாது விக்குமாய் போல நடித்து…
இப்பொழுது எனக்கு நீர்த்தாகம் மிகவும் உளது என்று…
சுந்தரியே புனல் தந்திட வழிகாட்டு என்றார்…

வள்ளி

தொண்டை விக்கிக்கொண்டதென்றால் என்செய்வேன்…
அண்டைப் புலவிற்கு அப்பால் உள்ள ஏழு மலைக்கு அருகில்…
தெண்ணீர்ச் சுனையுண்டு அங்கு சென்றால் உமது...
தண்ணீர் தாகம் எல்லாம் அடங்குமென செல்வீராக…

முருகன்

செல்லும் வழியறியேன் திருச்சுனையின் திசையறியேன்…
செல்வியே நீ வந்து நேரான வழி காட்டுவாயே…

வள்ளி

நல்ல வழி காட்டுகின்றேன் ஞானப்பெருங் கிழவரே…
நல்ல நீர் இருக்கும் சுனை அடைவதற்கு என் பின்னே…
மெல்ல மெல்ல நடந்து வாரும்…
(வள்ளியும் கிழவரை கையில் பிடித்துக் கொண்டு செல்கிறாள்)

பாட்டு

ஏறாத மேடெல்லாம் ஏறி அவர்கள் இருவருமாய்…
மாறான கருத்துடன் முருகன் வள்ளி பின் செல்ல…
ஏழுமலை ஏறி அதற்கப்பால் உள்ள அமிழ்தூறும்…
ஊறாது மலை உச்சியினில் இருந்து வரும் நீர் தன்னை அப்பன்…
ஊற்று ஞானம் கூடுமா போல் உவப்பாக உண்டார்…

பாகம் 05 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 06 பதிவிடப்படும்...



0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக