2009-09-01

சிறீவள்ளி திருமணம் - பாகம் 04


இசையும் கதையும்

முருகன் வள்ளி முன் வேடுவனாக வருகிறார்

மானே இளங்குயிலே மயிலே மட்ப்பிடியே…
மைந்தொடியே நீ என்னைப் பார்த்து மணம் செய்வாய்…

வள்ளி

ஆர் காணும் வேடுவரே அடியேனைக் காதலித்தீர்…
அப்பாவூம் சோதரும் அறிந்தால் உமைத் தொலைப்பார்…
சீர்காரை என்னைத் திருமணமுஞ் செய்யத்…
திண்டாட்டம் கொள்ளாமல் சென்று விடும் என்றுரைத்தாள்…

முருகன் அதைக் கேட்டு

இன்னவாறு வள்ளி நீ எதிர் மாறு கூறாதே…
இன்ப மொழி யொன்று சொல்லு இன்முறுவல் செய்து விடு…
மன்னும் விழி நோக்கி வழியொன்று காட்டாயோ…
வன்வலைப்படு மான் போன்று எனை வருந்த வைக்காதே…

இவ்வாறு முருகன் ஆடல் செய்கிறார்.
அத்தருணம் வள்ளியின் தகப்பனார் நம்பிராசன் வருகின்றார்.


வள்ளி தம்பால் நாடி வரும் நம்பிராசன் நல்ல…
வள்ளிக்கிழங்கும் நறுங்காட்டுப் பசும்பாலும்…
தெள்ளிய நீரும் தேன் தினையும் நிரம்பச் சுமந்து…
கள்ளமிலாது கருத்துடனே அணைந்தான்…

உரை:

அவ்வேளையிலே அங்கு வந்து நின்ற குமரனாகிய வேடுவனார் செவ்விதான சீர் வேங்கை மரமாகி நல்லதோர் நிழலானார் குமரிக்கு

வேடர்கள்:

எவ்வாறு இவ்விடத்தில் இவ்வேங்கை மரம் வேரூன்றியதோ?
ஒவ்வாது இம்மரத்தை இல்லாது அகற்றுங்கள்...

வள்ளி:

அப்பா நான் இம்மாயமாம் வேங்கை வந்த வகையறியேன்…
அப்பாலாய் இப்பாலாய் தாயாகித் தந்தையாய்த் தானாகி நின்றதென்று…
தப்பாக கூறும் தன் மகளின் கூற்றுதனை மகிழ் நம்பிராசன் நம்பி…
இப்போதைக்கு இம்மரம் நிழலாக நிற்கட்டும் தறியாதீர் எனத்தடுத்தான்...

கந்தப்புராணம்

ஆங்கது காலை தன்னில் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவணெல்லாம் உயர் சிவ நீலதாக
பாங்கமர் சுவடு முற்றும் பல கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வேரன் நின்றான்

வேங்கை மரத்தைத் தறியாதீர்கள் எனத்தடுத்து தம் மகளுக்கு நிழலாகட்டும் எனக்கூறி அவ்விடத்தை விட்டு அகன்றான் நம்பிராசன்

வேங்கை மரம் வேடுவனாகின்றான். முன்பு போல மீண்டும் முருகன் வள்ளியிடம் கூறுகிறான்.

முகுந்தன் மகளே..
வள்ளி எனும் நாமம் பெற்ற உன்னை..
வெகுவாக விரும்பி மோகம் மிகவும் உற்றேன் நான்..
அம்மையே நீ என்னை அருமணம் செய்வாயாகுக…

வள்ளி முருகனுக்கு கூறுகிறாள் (முருகன் திருவிளையாடலை வள்ளி அறிதல்)

ஐயரே நீங்களோ உயர் குலத்தீர் தமியளோ வேடுவிச்சி…
தங்கள் குலம் விட்டு தாவி மணம் பூணுவது அருங் குலத்துக் காகாதே…
ஆகையால் அன்புடையீர் அடியேன் தனை விலகிப்போமின்…
இல்லையெனில் அல்லல் செய்யும் வேடுவரோ உம்மை...
தொல்லைகள் பலவும் செய்திடுவார் தொலைத்திடுவார்…

அன்புடையீர் எனக்கூறக்கேட்ட வேடுவனார் வள்ளியின் இணக்கத்தை நன்கு அறிந்தார். தான் வந்த விசயம்வெற்றி என தனக்குள் எண்ணி விட்டார். :)

பாகம் 04 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 05 பதிவிடப்படும்...

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக