2009-08-31

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 03


இசையும் கதையும்

முருகன் திருத்தணிகைக்கு வருதல்


பாடல்:

வள்ளிக் கருள்புரிய வள்ளலெனும் வேலழகன்…
வாழ்கந்த மலையைவிட்டு மன்னும் திருத்தணிகைக்…
கொள்ளும் புகழ் மலையிற் கொலுவீற்றிருந்தானே…
குமரன் திருமுகப்பெருமான் இருந்தானே...

நாரதன் முருகனைப்பணிந்து ஆராதனை செய்கிறார் (முருகா சரணம்)

நினைத்த போதில் என்முன் வருவாய்…
நித்திய சாந்த நிலையைத் தருவாய்…
மனத்துயர் தீர்க்கும் மருந்தே வருவாய்…
மண்டலமெல்லாம் நிறைந்தாய் குருவாய்…

முருகன் நாரதரைப் பார்த்து

அருள் நிறைந்து வருகை தந்த அருமுனி தமைப்பார்த்து…
கருணை பொழிந்து வந்த காரணத்தை நயப்புடனே செவிமடுத்தார்!

நாரதர்:

பெருமறைகள் போற்றும் பெருமானே பூரணனே பூர்வா உனைப்…
போற்றிய சுந்தரவல்லி தாம்பெற்ற வரத்தின்படி நம்பிராசனுக்கு ஓர் மகளாகி… அழகுக்கிணையில்லா அழகியார் வள்ளி என நாமம் பெற்று வாழ்கின்றாள்…
குறவர் குலமுறையில் உயர் பரணில் ஆலோலம் ஓலமிட்டு வாடுகிறாள்…

கருணைக் கடலே கடுவினைகள் தீர்ப்பவனே கற்பகவல்லி…
தரு பாலகனே தணிகைமலை நாயகனே தந்திமுகற்கிளையவனே…
உரிமையுடன் நீ அங்கு சென்று அம்மணியாம் வள்ளி நாயகியை…
அரிய மணமியற்றி அடியேமைக் காத்திடுவீர் எம்வினை தீர்த்திடுவீர்…

முருகன் நாரதருக்கு

நன்று நன்று நாரதரே நமக்கும் நினைவதுவே…
என் கூற்று முறையாலே நான் ஆங்கு சென்று…
அன்னமென நீர் கூறும் அழகியாம் வள்ளிதனை…
மன்னும் மணம் செய்து காத்திடுவேன் செகமெல்லாம்…

(என்று கூறி முருகன் நாரதரை அனுப்பிவிட்டு, வேடனது வேடமாக வள்ளியிடம் செல்கின்றார்)

பாடல்

பல்லவி
சிலை வேடுவன் வந்தான் -அருட்
சிங்கார வேலன் வந்தான்…
(சிலை)

அனுபல்லவி
நிலை தாங்கிய தவம் பேணி…
நின்றிடும் வள்ளிமுன் சென்றிடும் சண்முக…
(சிலை)

சரணம்
மானைத் தேடு வானைப் போலே…
மதுவைத் தேடும் வானைப் போலே…
மோனம் நாடும் முதல்வன் போலே…
முன்னர் பழகிய நண்பனைப் போலே…
(சிலை)

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக